Kaalamaam Vanathil


காலமாம் வனத்தில் அண்டக் கோலமா மரத்தின் மீது

காளிசக்தி யென்றபெயர் கொண்டு – ரீங்

காரமிட் டுலவுமொரு வண்டு – தழல்

காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்

கால்களா றுடைய தெனக் கண்டு – மறை

காணுமுனி வோருரைத்தார் பண்டு

மேலுமாகி கீழுமாகி வேறுள திசையுமாகி

விண்ணும் மண்ணு மானசக்தி வெள்ளம் – இந்த

விந்தையெல்லாம் ஆங்கதுசெய் கள்ளம் – பழ

வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த

வீரசக்தி வெள்ளம் விழும்பள்ளம் – ஆக

வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்


    

Please leave your valuable suggestions and feedback here