Navarathri Jothiyile Navadurgai Thondrugiral


 

நவராத்ரி ஜோதியில் நவ துர்கை தோன்றுகிறாள்

சிவஷக்தி நம்மை காக்க திருவிளக்கில் தோன்றுகிறாள்

புரட்டாசி திங்களிலே புத்துணர்ச்சி ஊற்றுகின்றாள்

போற்றுபவர் வீட்டினிலே ஏற்றங்கள் காட்டுகிறாள்

அஞ்ஞான இருள் நீக்க அம்பிகை வாளெடுத்தாள்

அரர்க்கரை வேரறுக்க அம்சங்கள் மூன்றானாள்

மாகாளி மஹாலக்ஷ்மி சரஸ்வதி வடிவெடுத்தாள்

மதுகைடப வதம் செய்தால் மகிஷன் மேல் கால் வைத்தாள்

சும்பன் நிஷும்பன் எனும் துஷ்டரை அடக்க வந்தாள்

துக்கத்தை நீக்குவதால் துர்கை என பெயர் கொண்டாள்

சண்டி சாமுண்டி ஆதி பராசக்தி அவள்

தர்மத்தை காப்பதற்கு அவதாரம் செயகின்றாள்


    

Please leave your valuable suggestions and feedback here