014-ThirunandhipuraVinnagaram


Thirunandhipura Vinnagaram ( Nathan Kovil – Sri Jaganatha Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
10

Total
10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.1

** தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி சும்பு மவையாய் *

மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை யாய பெருமான் *

தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட மார்வர் தகைசேர் *

நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.2

உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி யாமை முனநாள் *

மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன் மேவு நகர்தான் *

மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர் கிண்டி யதன்மேல் *

நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.3

உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி யாமை முனநாள் *

தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட மார்வர் தகைசேர் *

வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் *

நம்பனுறை கின்றநகர் நந்திபுர  விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.4

பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென வந்த அசுரர் *

இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல நின்ற பெருமான் *

சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல அடிகொள் நெடுமா *

நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.5

மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென வந்த அசுரர் *

தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி யாம ளவெய்தான் *

வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை யங்கை யுடையான் *

நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.6

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை யாக முனநாள் *

வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான் *

கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி லார்பு றவுசேர் *

நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.7

தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல் நந்தன் மதலை *

எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ நின்ற நகர்தான் *

மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள் ஆடுபொழில்சூழ் *

நந்திபணி செய்தநகர் நந்திபுர  விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.8

எண்ணில்நினை வெய்தியினி யில்லை யிறை யென்றுமுனி யாளர் திருவார் *

பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு கூட எழிலார் *

மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள் தாம லர்கள்தூய் *

நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.9

வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக மிக்க பெருநீர் *

அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி யார றிதியேல் *

பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி யெங்கு முளதால் *

நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 5.10.10

** நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம் நண்ணி யுறையும் *

உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை யானை * ஒளிசேர்

கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை யைந்து மைந்தும் *

முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள் முழுத கலுமே