017-ThiruNarayoor


ThiruNarayoor ( Naachiyar Kovil – Sri Thirunarayoor Nambi Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
106

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம்
2

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

Total
110

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.4.1

** அன்றாயர்கு லக்கொடி யோடணிமா மலர்மங்கையொ டன்பளவி * அவுணர்க்

கென்றானு மிரக்கமி லாதவனுக்குக் குறையுமிட மாவது * இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்த்திருவா லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர் *

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற் கிடம்மாமலை யாவது நீர்மலையே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.9.2

** சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா * அந்த ணாலி மாலே சோலை மழகளிறே *

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ * என்

எந்தாய் இந்த ளூராய் அடியேற் கிறையு மிரங்காயே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.3.3

மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும் *

ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன் *

கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்

தேனே * வருபுனல்சூழ் திருவிண் ணகரானே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.1

** கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால் *

பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன் *

விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான் *

நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.2

கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து * நீர்

இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன் *

திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை *

நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.3

கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து * எம்மை

எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன் *

செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர் *

நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.4

கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை *

வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன் *

செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ் *

நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.5

விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண் *

சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக ழாதமுன் *

மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல் சூழ்தரு *

நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.6

மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து *

என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன் *

தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான் *

நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.7

வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து * இவன்

பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன் *

சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர் *

நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.8

வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை *

கேண்மின் களீளையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன் *

வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர் *

நாளும் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.9

கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட *

குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன் *

பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம் *

நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே

  

 

  

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.4.10

** பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன் *

நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற *

கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல் *

மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே

  

 

  

 

  


14   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.1

** கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு * இமையோர்

துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய *

வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர் *

நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே

  

 

  

 

  


15   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.2

முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம் *

புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர் *

சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில்கூவும் *

நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே

  

 

  

 

  


16   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.3

ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட *

சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர் *

மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து *

நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே

  

 

  

 

  


17   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.4

உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு *

வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர் *

பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட *

நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே

  

 

  

 

  


18   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.5

விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய் *

நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர் *

பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று *

நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே

  

 

  

 

  


19   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.6

பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு *

புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர் *

நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின் *

நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே

  

 

  

 

  


20   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.7

முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த *

அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர் *

பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி *

நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே

  

 

  

 

  


21   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.8

வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்

விள்ள * சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர் *

கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும் *

நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே

  

 

  

 

  


22   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.9

பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன் *

தேரை யூரும் தேவ தேவன் சேருமூர் *

தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ *

நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே

  

 

  

 

  


23   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.5.10

** தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற *

நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல் *

காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை *

சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே

  

 

  

 

  


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.1

** அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்டகண்டன் *

கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடிகிற்பீர் *

வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு *

செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.2

கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் குலவரையின் மீதோடி யண்டத்தப்பால் *

எழுந்தினிது விளையாடு மீச னெந்தை இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும் *

உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள *

செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.3

பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா *

செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர் *

கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற *

தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.4

பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி *

அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர் *

வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த *

செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.5

அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் அரியுருவா யிரணியன தாகங்கீண்டு *

வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து *

பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம்பரந்து நிலம்பரக்கும்பொன்னிநாடன் *

தென் தமிழன் வட புலக்கோன்சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.6

தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய் *

தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் தானாய னாயினான் சரணென்றுய்வீர் *

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட *

தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.7

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே *

இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர் *

மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன் *

சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.8

முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச் சென்று * வென்றிச்

செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் சிரந்துணிந்தான் திருவடிநும் சென்னிவைப்பீர் *

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட *

திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


32   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.9

தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் தனியாளன் முனியாள ரேத்தநின்ற

பேராளன் * ஆயிரம்பே ருடைய வாளன் பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர் *

பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த *

தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

  

 

  

 

  


33   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.6.10

** செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை *

பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த *

அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் பாடுவார் வியனுலகில் நமனார்பாடி *

வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே

  

 

  

 

  


34   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.1

** ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரை *

தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான் *

வேளும் சேயு மனையாரும் வேற்க ணாரும் பயில்வீதி *

நாளும் விழவி னொலியோவா நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


35   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.2

முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய *

தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில் *

பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட *

நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.3

தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து *

துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண் *

புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட *

நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


37   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.4

ஓளியா வெண்ணெ யுண்டானென் றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால் *

விளியா ஆர்க்க ஆப்புண்டு  விம்மி யழுதான் மென்மலர்மேல் *

களியா வண்டு கள்ளுண்ணக் காமர் தென்றல் அலர்தூற்ற *

நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


38   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.5

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து *

கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் *

சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் *

நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


39   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.6

வள்ளி கொழுநன் முதலாய மக்க ளோடு முக்கண்ணான்

வெள்கி யோட * விறல்வாணன் வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான் *

பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா யலவன் முகம்நோக்கி *

நள்ளியூடும் வயல்சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


40   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.7

மிடையா வந்த வேல்மன்னர் வீய விசயன் தேர்கடவி *

குடையா வரையொன் றெடுத்தாயர் கோவாய் நின்றான் கூராழிப்

படையான் * வேதம் நான்கைந்து வேள்வி யங்க மாறிசையேழ் *

நடையா வல்ல அந்தணர்வாழ் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


41   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.8

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து *

கந்தார் களிற்றுக் கழல்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான் *

செந்தா மரைமே லயனோடு சிவனு மனைய பெருமையோர் *

நந்தா வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


42   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.9

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து *

உடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப *

மாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் * நாறும்

பொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே

  

 

  

 

  


43   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.7.10

** நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை *

கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை *

பன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள் *

மன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே

  

 

  

 

  


44   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.1

** மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய் * மாவலிமண்

தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை *

தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை *

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


45   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.2

முந்நீரை முன்னாள் கடைந்தானை * மூழ்த்தநாள்

அந்நீரை மீனா யமைத்த பெருமானை *

தென்னாலி மேய திருமாலை யெம்மானை *

நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


46   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.3

தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம் *

மூவாமை நல்கி முதலை துணித்தானை *

தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை *

நாவாயு ளானை நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


47   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.4

ஓடா அரியாய் இரணியனை யூனிடந்த *

சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை *

வாடா மலர்த்துழாய் மாலை முடியானை *

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


48   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.5

கல்லார் மதிள்சூழ் கடியிலங்கைக் காரரக்கன் *

வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த

வில்லானை * செல்வவிபீடணற்கு வேறாக *

நல்லானை நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


49   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.6

உம்பருலகோடு உயிரெல்லாம் * உந்தியில்

வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை *

அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை *

நம்பனை நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


50   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.7

கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி

விட்டானை * மெய்யம் அமர்ந்த பெருமானை *

மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை

நட்டானை நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


51   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.8

மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர் *

பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து *

விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை *

நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


52   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.9

** பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் *

சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை *

கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை *

நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே

  

 

  

 

  


53   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.8.10

** மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை *

நன்னறையூர் நின்ற நம்பியை * வம்பவிழ்தார்

கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் *

பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே

  

 

  

 

  


54   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.1

** பெடையடர்த்த மடவன்னம் பிரியாது * மலர்க்கமலம்

மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர் *

முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் *

இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே

  

 

  

 

  


55   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.2

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி *

வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர் *

பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற *

அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே

  

 

  

 

  


56   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.3

சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய * கதலிகளின்

திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர் *

வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் * மூவுலகோடு

அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே

  

 

  

 

  


57   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.4

துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல் *

நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் *

மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த *

குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே

  

 

  

 

  


58   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.5

அகிற்குறடுஞ் சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும் *

மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் *

பகற்கரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும் *

புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே

  

 

  

 

  


59   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.6

பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும் *

மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் *

மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை * திருமார்வில்

மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே

  

 

  

 

  


60   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.7

சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின் *

பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர் *

கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன் *

தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே

  

 

  

 

  


61   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.8

** குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும் *

தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் *

மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி *

நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே

  

 

  

 

  


62   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.9

மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து * எங்கும்

நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் *

பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த *

இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே

  

 

  

 

  


63   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.9.10

** திண்களக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை *

வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன் *

பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார் *

விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே

  

 

  

 

  


64   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.1

** கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை

இடந்த நம்பி * எங்கள் நம்பி எறிஞர் அரணழிய *

கடந்த நம்பி கடியா ரிலங்கை உலகை யீரடியால் *

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோநா ராயணமே

  

 

  

 

  


65   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.2

விடந்தா னுடைய அரவம் வெருவச் செருவில் முனநாள் * முன்

தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் *

இடந்தான் வையம் கேழ லாகி உலகை யீரடியால் *

நடந்தா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே

  

 

  

 

  


66   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.3

பூணா தனலும் தறுகண் வேழம் மறுக வளைமருப்பைப் *

பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் *

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர்வெண்ணெய் *

நாணா துண்டான் நாமம் சொல்லில் நமோநா ராயணமே

  

 

  

 

  


67   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.4

கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் நச்சிப் பாடகத்துள் *

எல்லா வுலகும் வணங்க விருந்த அம்மான் * இலங்கைக்கோன்

வல்லா ளாகம் வில்லால் முனிந்த எந்தை * விபீடணற்கு

நல்லா னுடைய நாமம் சொல்லில் நமோநா ராயணமே

  

 

  

 

  


68   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.5

குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் * மருவாத

விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான் * தென்னிலங்கை

அடையா அரக்கர் வீயப்  பொருது மேவி வெங்கூற்றம் *

நடையா வுண்ணக் கண்டான் நாமம் நமோநா ராயணமே

  

 

  

 

  


69   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.6

கான எண்கும் குரங்கும் முசுவும் படையா * அடலரக்கர்

மான மழித்து நின்ற வென்றி அம்மான் * எனக்கென்றும்

தேனும் பாலும் அமுது மாய திருமால் திருநாமம் *

நானும் சொன்னேன் நமரு முரைமின் நமோநா ராயணமே

  

 

  

 

  


70   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.7

நின்ற வரையும் கிடந்த கடலும் திசையு மிருநிலனும் *

ஒன்று மொழியா வண்ண மெண்ணி நின்ற அம்மானார் *

குன்று குடையா வெடுத்த அடிக ளுடைய திருநாமம் *

நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் நமோநா ராயணமே

  

 

  

 

  


71   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.8

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே யெமக்கென்று

படுங்கால் * நீயே சரணென் றாயர் அஞ்ச அஞ்சாமுன் *

நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி நிரையைச் சிரமத்தால் *

நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோநா ராயணமே

  

 

  

 

  


72   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.9

பொங்கு புணரிக் கடல்சூ ழாடை நிலமா மகள்மலர்மா

மங்கை * பிரமன் சிவனிந் திரன்வா னவர்நா யகராய் *

எங்க ளடிக ளிமையோர் தலைவ ருடைய திருநாமம் *

நங்கள் வினைகள் தவிர வுரைமின் நமோநா ராயணமே

  

 

  

 

  


73   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 6.10.10

** வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று நறையூர் நெடுமாலை *

நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை *

காவித் தடங்கண் மடவார் கேள்வன் கலிய னொலிமாலை *

மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே

  

 

  

 

  


74   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.1

** கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல் *

மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன் *

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி *

பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே

  

 

  

 

  


75   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.2

வற்றா முதுநீரொடு மால்வரை யேழும் *

துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே *

அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன் *

பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே

  

 

  

 

  


76   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.3

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய் *

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன் *

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே * உகந்தா யையுகந் தடியேனே

  

 

  

 

  


77   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.4

புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க *

உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா *

கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே *

வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே

  

 

  

 

  


78   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.5

வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும் *

கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே *

நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி *

சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே

  

 

  

 

  


79   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.6

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே *

முனியே திருமூழிக் களத்து விளக்கே *

இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே * உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே

  

 

  

 

  


80   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.7

கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு *

நிதியே திருநீர் மலைநித் திலத்தொத்தே *

பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்

கதியே * உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே

  

 

  

 

  


81   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.8

அத்தா அரியே என்றுன் னையழைக்க *

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை *

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே * உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே

  

 

  

 

  


82   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.9

தூயாய் சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம் *

தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா *

ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட

வாயா * உனையெங் ஙனம்நான் மறக்கேனே

  

 

  

 

  


83   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.10

** வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு *

என்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை *

தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட *

உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே

  

 

  

 

  


84   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.1

** புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து * என்னை யுள்ளங்கொண்ட

கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால் *

உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால் *

நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


85   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.2

ஓடாவாளரியி ன் உருவாய் மருவி * என்றன்

மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா *

பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு *

நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


86   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.3

எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின் *

அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற *

நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ * உன்

மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே

  

 

  

 

  


87   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.4

சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்

உறைவாய் * என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான் *

அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும் *

நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


88   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.5

நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால் *

ஆண்டாயென் று ஆதரிக்கப் படுவாய்க்கு நானடிமை

பூண்டேன் * என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *

நாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


89   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.6

எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை

வந்தார் * என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன் *

அந்தோ என் னாருயிரே  அரசே அருளெனக்கு * நந்தாமல்

தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


90   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.7

மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா *

என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர் *

வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன் *

நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


91   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.8

எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது * தங்கள்

கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய் *

இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *

நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


92   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.9

ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால் *

யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த

தேனே * தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால் *

நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ

  

 

  

 

  


93   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.2.10

** நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை *

கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன் *

சொன்னீர சொல்மாலை சொல்வார்கள் * சூழ்விசும்பில்

நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே

  

 

  

 

  


94   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.1

** சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்

மனவுட் கொண்டு * என்று மெப்போதும் நின்றேத்தும்  மாமுனி யைமர மேழெய்த மைந்தனை *

நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை *

கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே

  

 

  

 

  


95   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.2

தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து * தானெனக்

காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட

வாய னை * மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி

யாயனை * அம ரர்க்கரி யேற்றையென் அன்ப னையன்றி யாதரி யேனே

  

 

  

 

  


96   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.3

வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான் * அடி யேனுடைச்

சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன் *

கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை *

எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே

  

 

  

 

  


97   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.4

உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று *

இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்  எம்பி ரானைவம் பார்புனல் காவிரி *

அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று *

சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே

  

 

  

 

  


98   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.5

ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து

தாங்கு * தாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற *

வேங்கடத்தரி யைப்பரி கீறியை வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட

தீங்க ரும்பினை * தேனைநன் பாலினை அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே

  

 

  

 

  


99   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.6

எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ் *

தட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின் தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்

கட்டி யை * கரும் பீன்றவின் சாற்றைக் காத லால்மறை நான்குமுன் னோதிய

பட்ட னை * பர வைத்துயி லேற்றையென் பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே

  

 

  

 

  


100   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.7

பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற பாலை யாகி யிங்கே புகுந்து * என்

கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள் *

விண்ணு ளார்பெரு மானையெம் மானை வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்

வண்ணன் * மாமணி வண்ணனெம் மண்ணல் வண்ண மேயன்றி வாயுரை யாதே

  

 

  

 

  


101   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.8

இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் கிம்மை யேயருள் பெற்றமை யால் * அடும்

துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் தோற்றத் தொன்னெறி யை * வையம் தொழப்படும்

முனியை வானவ ரால்வணங் கப்படும் முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்

கனியை * காதல்செய் தென்னுள்ளங் கொண்ட கள்வ னையின்று கண்டுகொண் டேனே

  

 

  

 

  


102   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.9

என்செய் கேனடி னேனுரை யீர்இதற் கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ் *

தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை *

மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும் *

பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை அன்றி யென்மனம் போற்றியென் னாதே

  

 

  

 

  


103   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.3.10

** தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாள்கலி யன்திரு வாலி

நாடன் * நன்னறை யூர்நின்ற நம்பிதன் நல்ல மாமலர் சேவடி * சென்னியில்

சூடி யும்தொழு துமெழுந் தாடியும் தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை *

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே

  

 

  

 

  


104   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.7.4

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்

வரனே * மாதவ னே மது சூதா  மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண் *

நரனே நாரண னே திரு நறையூர் நம்பீ எம்பெரு மான் உம்ப ராளும் அரனே *

ஆதிவ ராகமுன் னானாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே

  

 

  

 

  


105   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 8.2.2

நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள் *

காணுமோ கண்ண புரமென்று காட்டினாள் *

பாணனார் திண்ண மிருக்க இனியிவள்

நாணுமோ * நன்றுநன் றுநறை யூரர்க்கே

  

 

  

 

  


106   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.5

சுடலை யில்சுடு நீறன் அமர்ந்தது * ஓர்

நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு * என்

உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் *

விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே

  

 

  

 

  


107   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 16

கன்றுமேய்த் தினிதுகந்த காளாய் என்றும் கடிபொழில்சூழ் கணபுரத்து என் கனியே என்றும் *

மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும் *

வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும் விரிபொழில்சூழ் திருநறையூர்  நின்றாய்என்றும் *

துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே

  

 

  

 

  


108   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 17

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று *

செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து * ஆங்கே

தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு *

நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே

  

 

  

 

  


109   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 71

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் *

** ஆராமம் சூழ்ந்த வரங்கம்

  

 

  
 

 

  


110   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 73,133

மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல் *

பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு

———————–

கண்ணனைக் கண்ண புரத்தானை * தென்னறையூர்

மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை