018-Thiruccherai


Thiruccherai ( Sri Saranathan Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
11

திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
1

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்
1

Total
13

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.1

** கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை *

மண்சேர முலையுண்ட மாமதலாய் வானவர்தம் கோவே என்று *

விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு * செல்வத் தண்சேறை

யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமேலாரே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.2

அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து * மல்லல்

கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம் *

வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய *

எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.3

மீதோடி வாளெயிறு மின்னிலக முன்விலகு முருவி னாளை *

காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த கைத்தலத்தா என்று நின்று *

தாதோடு வண்டலம்பும் தண்சேறை எம்பெருமான் தாளை யேத்தி *

போதோடு புனல்தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின் றாரே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.4

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ *

போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று * நாளும்

தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும் *

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.5

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன் *

முந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால் *

சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை * நாளும்

சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.6

பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா என்று நின்று *

தொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன் *

வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை *

கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.7

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் *

மைவிரியும் மணி வரைபோல் மாயவனே என்றென்றும் வண்டார் நீலம் *

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு * என்

ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.8

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா * மேலை

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்போ லடியி னானை *

பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் றன்னை *

கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.9

கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் போதொருகால் கவலை யென்னும் *

வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் கருநீலம் களைஞர்

தாளால் தள்ள * தேன் மணநாறும் தண்சேறை எம்பெருமான் தாளை *

நாளும் உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் என்னுள்ள முருகு மாறே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.4.10

** பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு * அன்னம்

தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் தண்சேறை யம்மான் றன்னை *

வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர் *

தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் துணைக்கையால் தொழுது நின்றே

  

 

  

 

  


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.6

வானை ஆரமு தம்தந்த வள்ளலை *

தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய் *

ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்

கோனை * யாம்குடந் தைச்சென்று காண்டுமே

  

 

  

 

  


12   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 72

கணமங்கை 

காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் *

சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்

  

 

  
 

 

  


13   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 115

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை *

மன்னிய தண்சேறை வள்ளலை மாமலர்மேல்