025-Thirukkannankudi


Thirukkannankudi ( Sri Loganatha Perumal Temple )

Azhwar Paasuram Count Video Audio
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
10

Total
10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.1

** வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி *

சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன் *

அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று * எரி மூன்றும்

செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.2

கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கி * யுள் நினைந்து

துவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன் *

குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி *

திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.3

வாதைவந் தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப *

மீதுகொண் டுகளும் மீனுரு வாகி விரிபுனல் வரியகட் டொளித்தோன் *

போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து * சீதவொண்

தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.4

வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண் *

பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் *

ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்து உயர்கொடி யொளிவளர் மதியம் *

சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.5

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு *

பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் *

அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல் *

செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.6

மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து * உதிரக்

குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக் *

குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும் *

செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.7

வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை *

பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன் *

கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர *

தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.8

அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தைஅஞ்சிடா தேயிட * அதற்குப்

பெரியமா மேனி யண்டமூ டுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் *

வரையின்மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும் *

திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங் குடியுள் நின் றானே

  

 

  

 

  


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.9

பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில் *

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன் *

துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய் *

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே

  

 

  

 

  


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.1.10

** கலையுலாவல்குல் காரிகை திறத்துக்  கடல்பெரும் படையொடும் சென்று *

சிலையினால் இலங் தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை *

மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள் *

உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே