034-ThiruManimaadaKovil


Thiru Manimaada Kovil ( Sri Narayana Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 11
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 12

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.1

** நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே கருமா முகில்போல்

எந்தாய் * எமக்கே யருளாய் எனநின்று இமையோர் பரவு மிடம் * எத் திசையும்

கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து *

மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.2

முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய *

விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம் * விண்ணணவும்

பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம் *

மதலைத் தலைமென்  பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.3

கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து * கொங்கார்

இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ டணைந்திட்ட வம்மானிடம் * ஆளரியால்

அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு * பொன்னி

மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.4

சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய * செருவில்

கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான் *

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர் *

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.5

இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து *

தழைவாட வந்தாள் குருந்த மொசித்துத் தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான் *

குழையாட வல்லிக் குலமாட மாடே குயில்கூவ நீடு கொடிமாட மல்கு *

மழையாடு சோலை மயிலாலு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.6

பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப் பகுவாய்க் கழுதுக் கிரங்காது * அவள்தன்

உண்ணா முலைமற் றவளாவி யோடும் உடனே சுவைத்தா நிடம் * ஓங்கு பைந்தாள்

கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக் கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து *

மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.7

தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத் தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம் *

இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல் அடிவைத்த அம்மா னிடம் * மாமதியம்

திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று * மூன்றில்

வளைக்கை நுளை ப்பாவை யர்மாறு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.8

துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம் துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும் * முற்றா

விளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம் * வேல் நெடுங்கண்

முளைவாளெயிற்று மடவார் பயிற்று மொழிகேட் டிருந்து முதிராதவின்சொல் *

வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.9

விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த விகிர்தா விளங்கு சுடராழி யென்னும் *

படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று இமையோர் பரவு மிடம் * பைந் தடத்துப்

பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத் தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர் *

மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 3.8.10

** வண்டார் பொழில்சூழ்ந் தழகாய நாங்கூர் மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு * என்றும்

தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன் கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார் *

கண்டார் வணங்கக் களியானை மீதே கடல்சூ ழுலகுக் கொருகா வலராய் *

விண்டோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ் விரிநீ ருலகாண் டுவிரும் புவரே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.3

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய *

பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் * மாலை

ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் *

ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 132

நாங்கூரில் மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை *

நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை