036-ThiruDevanaarThogai


Thiru Devanaar Thogai ( Sri Deiva Naayaga Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
Total 10

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.1

** போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள் *

தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல் *

மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை * வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.2

யாவருமா யாவையுமா யெழில்வேதப் பொருள்களுமாய் *

மூவருமாய் முதலாய மூர்த்தியமர்ந் துறையுமிடம் *

மாவரும்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னுநாங்கை *

தேவரும்சென் றிறைஞ்சுபொழில் திருத்தேவ னார்தொகையே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.3

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும் *

தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம் *

ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள் *

தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.4

இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த *

சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் *

எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை *

சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.5

அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும் *

உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம் *

தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல் *

திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.6

ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத *

பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம் *

சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல் *

சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.7

ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை *

வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம் *

ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள் *

சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.8

வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான் *

காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம் *

ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள் *

சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.9

கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ *

கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம் *

வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள் *

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 4.1.10

** காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம் *

சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல் *

கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார் *

ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே