050-ThiruAshtabujam


Thiru Ashtabujam ( Sri Aadhikesava Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
Total 12

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.1

** திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப *

முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க *

எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா *

அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.2

வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும் *

செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன் *

வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த *

அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.3

செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள் *

உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே *

வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து * இருண்ட

அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.4

மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை

யஞ்ச * அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன் *

வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து *

அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.5

கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும் * மற்றை

நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து * நீண்ட

மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற *

அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.6

எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம் ஏந்திழையார் *

சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து * தாமும்

பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம் *

அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.7

முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும் * மேனியஞ்சாந்

திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன் ஓவிநல்லார் *

எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும் *

அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.8

மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை

தேவி * அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில் *

காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் * என்

ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.9

தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு *

வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு *

நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன் *

அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.8.10

** மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன் *

தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை *

கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி * குன்றா

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 128

வெஃகாவில் உன்னிய யோகத் துறக்கத்தை * ஊரகத்துள்

அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை


12   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 99

** தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் *

அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று * குட்டத்துக்

கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் *

தாள்முதலே நங்கட்குச் சார்வு