061-Thiruthanka


Thiruthanka ( Thoopul – Sri Deepa Prakasar Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் 1
நம்மாழ்வார் திருவிருத்தம் 1
Total 3

1   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.2

** பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்

மின்னை * வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் *

என்னை யாளுடை யீசனை யெம்பிரான்

றன்னை * யாம்சென்று காண்டும்தண் காவிலே


2   திருமங்கையாழ்வார் – திருநெடுந்தாண்டகம் – 14

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற *

அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை *

விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே


3   நம்மாழ்வார் – திருவிருத்தம் – 26

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட *

வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை * கடந்தபொன்னே

கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்

தேனிளஞ் சோலையப் பாலது * எப் பாலைக்கும் சேமத்ததே