063-ThiruEvvul


Thiru Evvul ( Tiruvallore – Sri Veeraraghava Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 10
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
Total 12

1   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 36

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் *

நாகத் தணையரங்கம் பேரன்பில் * நாகத்

தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால் *

அணைப்பார் கருத் தனா வான்


2   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.1

** காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர் *

நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான் *

வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று *

ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே


3   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.2

தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன் *

பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும் * அன்று

செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள *

எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே


4   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.3

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்

மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து * அவனே

பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப் பெருநிலத்தார் *

இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே


5   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.4

பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால் *

வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர் *

நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான் *

எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே


6   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.5

பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல் *

சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில் *

நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி *

ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே


7   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.6

சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும் *

ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம் *

மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு-

தேத்தும் * நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே


8   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.7

திங்க ளப்பு வானெரிகாலாகி * திசைமுகனார்

தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த * வண்டுண்

தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற *

எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே


9   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.8

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த

புனிதன் * பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் *

தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு

இனியன் * எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே


10   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.9

பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை பனிமலராள் *

வந்தி ருக்கும் மார்வன்நீல மேனி மணிவண்ணன் *

அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த *

இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே


11   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 2.2.10

** இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை *

வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன் *

கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார் *

அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே


12   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 116

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை *

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை