081-Thirukkotiyoor


Thirukkotiyoor ( Sri Uraga Mellanayaan Perumal Temple )

Azhwar Paasuram Count
பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி 22
திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி 1
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 12
திருமங்கையாழ்வார் பெரிய திருமடல் 1
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி 2
பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி 1
Total 39

1   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.1

** வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர் *

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் *

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் *

கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே


2   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.2

ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார் *

நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார் *

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று *

ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே


3   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.3

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில் *

காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார் *

ஆணொப் பார்இவன் நேரில்லை காண் * திரு

வோணத் தானுல காளுமென் பார்களே


4   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.4

உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார் *

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே


5   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.5

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு *

தண்டி னர்பறி யோலைச் சயனத்தர் *

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர் *

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்


6   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.6

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர் *

பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் *

ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட *

வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே


7   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.7

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் *

ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம் *

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் *

மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே


8   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.8

பத்து நாளும் கடந்த இரண்டாநாள் *

எத்தி சையும் சயமரம் கோடித்து *

மத்த மாமலை தாங்கிய மைந்தனை *

உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே


9   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.9

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் *

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும் *

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் *

மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்


10   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 1.1.10

** செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர் *

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை *

மின்னு நூல்விட்டு சித்தன் விரித்த * இப்

பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே</p


11   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 2.6.2

கொங்குங் குடந்தையும் கோட்டியூ ரும்பேரும் *

எங்கும் திரிந்து விளையாடும் என்மகன் *

சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க * நில்

அங்க முடையதோர் கோல்கொண்டுவா அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா


12   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.1

** நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்விருந் தோம்புவார் *

தேவகாரியம் செய்துவேதம் பயின்றுவாழ்திருக் கோட்டியூர் *

மூவர்காரிய மும்திருத்தும் முதல்வனைச்சிந்தி யாத * அப்

பாவகாரிக ளைப்படைத்தவன் எங்ஙனம்படைத் தான்கொலோ


13   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.2

குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனு கூலராய் *

செற்றமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *

துற்றியேழுல குண்டதூமணி வண்ணன்தன்னைத் தொழாதவர் *

பெற்றதாயர் வயிற்றினைப்பெரு நோய்செய்வான்பிறந் தார்களே


14   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.3

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி நிழலெழும்

திண்ணைசூழ் * திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள் *

எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும்எண்ணகி லாதுபோய் *

உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே


15   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.4

உரகமெல்லணை யான்கையில் உறை சங்கம்போல்மட வன்னங்கள் *

நிரைகணம்பரந் தேறும்செங்கம லவயல்திருக் கோட்டியூர் *

நரகநாசனை நாவிற்கொண்டழை யாதமானிட சாதியர் *

பருகுநீரும் உடுக்குங்கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ


16   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.5

ஆமையின் முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர் சாடிப்போய் *

தீமைசெய்துஇள வாளைகள்விளை யாடுநீர்த்திருக் கோட்டியூர் *

நேமிசேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை *

பூமிபாரங்க ளுண்ணும்சோற்றினை வாங்கிப்புல்லைத் திணிமினே


17   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.6

பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் *

ஏதமொன்றுமி லாதவண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *

நாதனைநர சிங்கனைநவின் றேத்துவார்க ளுழக்கிய *

பாததூளி படுதலால்இவ் வுலகம்பாக்கியம் செய்ததே


18   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.7

குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து *

திருந்துநான்மறை யோர்இராப்பகல் ஏத்திவாழ்திருக் கோட்டியூர் *

கருந்தடமுகில் வண்ணனைக்கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் *

இருந்தவூரி லிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய் தார்கொலோ


19   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.8

நளிர்ந்தசீலன் நயாசல னபிமானதுங்கனை * நாடொறும்

தெளிந்தசெல்வனைச் சேவகஙகொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் *

குளிர்ந்துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள் *

விளைந்த்தானியமு மிராக்கர் மீதுகொள்ளகிலார்களே


20   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.9

கொம்பினார்பொழில் வாய்குயிலினம் கோவிந்தன்குணம் பாடுசீர் *

செம்பொனார்மதிள் சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் *

நம்பனைநர சிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால் *

எம்பிரான்தன சின்னங்கள்இவ ரிவரென்றுஆசைகள் தீர்வனே


21   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.10

காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு *

தேசவார்த்தைப டைக்கும்வண்கையி னார்கள்வாழ்திருக் கோட்டியூர் *

கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய்குற ளாஎன்று *

பேசுவார்அடி யார்கள்எந்தம்மை விற்கவும் பெறுவார்களே


22   பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி – 4.4.11

** சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர் *

ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும் *

கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல் *

ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே


23   திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி – 34

குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த *

குறிப்பெனக்கு நன்மை பயக்க * வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல் *

தான்கடத்தும் தன்மையான் தாள்


24   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 7.1.3

தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய் *

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன் *

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே * உகந்தா யையுகந் தடியேனே


25   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.1

** எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன் * ஏத் தடியவர்

தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான் *

பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி *

செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே


26   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.2

எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய் * நிலமகள்

செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான் *

மௌவல் மாலைவண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து * மாருதம்

தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே


27   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.3

வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை * எமக்கு

ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான் *

துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை *

தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே


28   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.4

ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து * உடம்பிலோர்

கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான் *

நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு * நன்னறுந்

தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே


29   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.5

வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன் * மதுமலர்த்

தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான் *

மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி * வானுயர்

திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே


30   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.6

காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து * மற்றவன்

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான் *

நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென *

தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே


31   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.7

கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று * மாமழை

நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான் *

குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து * இளந்

தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே


32   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.8

பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து * அடியேனை யாளுகந்து

ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான் *

தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி *

தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே


33   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.9

கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை *

மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர் *

மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும் *

தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே


34   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 9.10.10

** ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் * அணிபொழில்

சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை *

நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த * இந்

நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே


35   திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 10.1.9

கம்ப மாகளி றஞ்சிக் கலங்க * ஓர்

கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை *

கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் *

நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே


36   திருமங்கையாழ்வார் – பெரிய திருமடல் – 125

மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை *

கொன்னவிலும் ஆழிப் படையானை * கோட்டியூர்

அன்ன வுருவில் அரியை


37   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 46

பயின்ற தரங்கம் திருக்கோட்டி * பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே *

மணிதிகழும் வண்தடக்கை மால்


38   பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி – 87

இன்றா வறிகின்றே னல்லேன் * இருநிலத்தைச்

சென்றாங் களந்த திருவடியை * அன்று

கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் *

திருக்கோட்டி எந்தை திறம்


39   பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி – 62

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம் *

மண்ணகரம் மாமாட வேளுக்கை * மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி *

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு