087-Thirupuliyoor


Thirupuliyoor ( Sri Maayapiran Perumal Temple )

Azhwar Paasuram Count
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல் 1
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 12

1   திருமங்கையாழ்வார் – சிறிய திருமடல் – 71

பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் *

** ஆராமம் சூழ்ந்த வரங்கம்


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.1

** கருமா ணிக்க மலைமேல்மணித் தடந்தாமரைக் காடுகள்போல் *

திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை யாடைகள் செய்யபிரான் *

திருமா லெம்மான் செழுநீர்வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் *

அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீரிதற் கென்செய்கேனா


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.2

அன்னைமீ ரிதற்கென் செய்கேன்? அணிமேருவின் மீதுலவும் *

துன்னு சூழ்சுடர் ஞாயிறும் அன்றியும்பல் சுடர்களும்போல் *

மின்னு நீண்முடி யாரம்பல்கலன் றானுடை யெம்பெருமான் *

புன்னை யம்பொழில் சூழ்திருப் புலியூர் புகழுமிவளே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.3

புகழு மிவள்நின் றிராப்பகல் பொருநீர்க்கடல் தீப்பட்டு * எங்கும்

திகழு மெரியோடு செல்வதொப்பச் செழுங்கதி ராழிமுதல் *

புகழும் பொருபடை யேந்திப்போர் புக்கசுரரைப் பொன்றுவித்தான் *

திகழு மணிநெடு மாடம்நீடு திருப்பூலி யுர்வளமே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.4

ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து *

ஏர்வ ளம்கிளர் தண்பணைக் குட்டநாட்டுத் திருப்பூலியூர் *

சீர்வ ளம்கிளர் மூவுல குண்டுமிழ் தேவபிரான் *

பேர்வ ளம்கிளர்ந் தன்றிப் பேச்சிலளின்றிப் புனையிழையே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.5

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும் *

நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால் *

சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர் *

முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.6

திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான் *

திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள * அருளால்

திருவருள் அவன் சென்று சேர்தண் திருப்பூலியுர் *

திருவருள் கமுகொண் பழுத்தது மெல்லியல் செவ்விதழே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.7

மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின் *

மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து *

புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர் *

மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.8

மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன் * மல்லைச்செல்வ

வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய் *

திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர் *

படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.9

பரவா ளிவள்நின் றிராப்பகல் பனிநீர்நிறக் கண்ணபிரான் *

விரவா ரிசைமறை வேதியரொலி வேலையின் நின்றொலிப்ப *

கரவார் தடந்தொறும் தாமரைக் கயந்தீவிகை நின்றலரும் *

புரவார் கழனிகள் சூழ்திருப் புலியூர்ப்புக ழன்றிமற்றே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.10

அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல் *

குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி *

தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர் *

நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே


12   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.9.11

** நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும் நாயகன் றன்னடிமை *

நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் * சொல்

நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள் இவையு மோர்பத்தும்

நேர்ப்பட் டாரவர் * நேர்ப்பட்டார் நெடுமாற்கடி மைசெய்யவே