092-ThiruVattaaru


Thiru Vattaaru – Sri Aadhikesava Perumal Temple

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.1

** அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு * ஆழியான்

அருள்தருவான் அமைகின்றான் அதுநமது விதிவகையே *

இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன் *

மருளொழிநீ மடநெஞ்சே வாட்டாற்றான் அடிவணங்கே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.2

வாட்டாற்றா னடிவணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் *

கேட்டாயே மடநெஞ்சே கேசவனெம் பெருமானை *

பாட்டாய பலபாடிப் பழவினைகள் பற்றறுத்து *

நாட்டாரோ டியல்வொழிந்து நாரணனை நண்ணினமே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.3

நண்ணினம் நாரணனை நாமங்கள் பலசொல்லி *

மண்ணுலகில் வளம்மிக் க வாட்டாற்றான் வந்தின்று *

விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே *

எண்ணினவா றாகாவிக் கருமங்க ளென்னெஞ்சே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.4

என்னெஞ்சத் துள்ளிருந்திங் கிருந்தமிழ்நூலிவைமொழிந்து *

வன்னெஞ்சத் திரணியனை மார்விடந்த வாட்டாற்றான் *

மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான் *

நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான் செய்வானே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.5

வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே *

நானேறப் பெறு கின்றென் நரகத்தை நகுநெஞ்சே *

தேனேறு மலர்த்துளவம் திகழ்பாதன் * செழும்பறவை

தானேறித் திரிவான தாளிணையென் தலைமேலே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.6

தலைமேல தாளிணைகள் தாமரைக்கண் என்னம்மான் *

நிலைபேரான் என்நெஞ்சத் தெப்பொழுதும் எம்பெருமான் *

மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான் * மதமிக்க

கொலையானை மருப்பொசித் தான் குரைகழல்தள் குறுகினமே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.7

குரைகழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் *

திரைகுழுவு கடல்புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன *

வரைகுழுவும் மணிமாட வாட்டாற்றான் மலரடிமேல் *

விரைகுழுவும் நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.8

மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன் *

கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது * புனல்

மைந்நின்ற வரைபோலும் திருவுருவ வாட்டாற்றாற்கு *

எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழவதுவே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.9

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் *

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு *

புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம்கெடுத்தான் *

இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.10

பிரியாதாட் செய்யென்று பிறப்பறுத்தாள் அறக்கொண்டான் *

அரியாகி இரணியனை ஆகங்கீண் டானன்று *

பெரியார்க்காட் பட்டக்கால் பெறாதபயன் பெறுமாறு *

வரிவாள்வாய் அரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 10.6.11

** காட்டித்தன் கனைகழல்கள் கடுநரகம் புகலொழித்த *

வாட்டாற்றெம் பெருமானை வளங்குருகூர்ச் சடகோபன் *

பாட்டாய தமிழ்மாலை யாயிரத்துள் இப்பத்தும்

கேட்டு * ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே