094-Thirukkadithaanam


Thirukkadithaanam ( Sri Athpudha Narayana Perumal Temple )

Azhwar Paasuram Count
நம்மாழ்வார் திருவாய்மொழி 11
Total 11

1   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.1

** எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ *

நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான் *

அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர் *

செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே


2   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.2

திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் *

ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர் *

செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை *

உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே


3   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.3

ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று *

உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான் *

திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை *

மருவி யுரைகின்ற மாயப் பிரானே


4   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.4

மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற *

நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான் *

தேசத் தமரர் திருக்கடித் தானத்தை *

வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே


5   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.5

கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை *

கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம் *

கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ * வைகுந்தம்

கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே


6   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.6

கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும் *

மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை *

பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை *

ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே


7   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.7

கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன் *

மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை *

மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து *

நண்ணு திருக்கடித் தான நகரே


8   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.8

தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும் *

வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே *

ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்

தான நகரும் * தனதாயப் பதியே


9   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.9

தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும் *

மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை *

தேயத் தமரர் திருக்கடித் தானத்துள் *

ஆயர்க் கதிபதி அற்புதன் தானே


10   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.10

அற்புதன் நாரா யணனரி வாமனன் *

நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம் *

நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர் *

கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே


11   நம்மாழ்வார் – திருவாய்மொழி – 8.6.11

** சோலை திருக்கடித் தானத் துறைதிரு மாலை *

மதிள்குரு கூர்ச்சடகோபன்சொல் *

பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும் *

மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே