கந்தர் அநுபூதி


கந்தர் அநுபூதி

 

Full Version
   

Meaning

   

Ready Reckoner


கந்தர் அநுபூதி-காப்பு

 

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக

தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்

 

   

Meaning-காப்பு

   

நூல்

1   கந்தர் அநுபூதி-1

 

ஆடும் பரி வேல் அணிசேவல் என

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனி யானைச் சகோதரனே

 

   

Meaning-1

   

2   கந்தர் அநுபூதி-2

 

உல்லாச நிராகுல யோக இத

சல்லாப விநோதனும் நீ அலையோ

எல்லாம் அற என்னை இழந்த நலம்

சொல்லாய் முருகா சுரபூபதியே

 

   

Meaning-2

   

3   கந்தர் அநுபூதி-3

 

வானோ புனல் பார் கனல் மாருதமோ

ஞானோ தயமோ நவில் நான் மறையோ

யானோ மனமோ எனை ஆண்ட இடம்

தானோ பொருளாவது சண்முகனே

 

   

Meaning-3

   

4   கந்தர் அநுபூதி-4

 

வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்

தளைபட்டு அழிய தகுமோ தகுமோ

கிளைபட்டு எழு சூர் உரமும் கிரியும்

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே

 

   

Meaning-4

   

5   கந்தர் அநுபூதி-5

 

மக மாயை களைந்திட வல்ல பிரான்

முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே

அகம் மாடை மடந்தையர் என்று அயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே

 

   

Meaning-5

   

Verses 1 to 5

   

6   கந்தர் அநுபூதி-6

 

திணியான மனோ சிலை மீது உனதாள்

அணியார் அரவிந்தம் அரும்பு மதோ

பணியார் என வள்ளி பதம் பணியும்

தணியா அதிமோக தயா பரனே

 

   

Meaning-6

   

7   கந்தர் அநுபூதி-7

 

கெடுவாய் மனனே கதி கேள் கரவாது

இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே

 

   

Meaning-7

   

8   கந்தர் அநுபூதி-8

 

அமரும் பதி கேள் அகம் ஆம் எனும் இப்

பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா

குமரன் கிரிராச குமாரி மகன்

சமரம் பொரு தான் அவ நாசகனே

 

   

Meaning-8

   

9   கந்தர் அநுபூதி-9

 

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலை

பட்டு ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல நிர்பயனே

 

   

Meaning-9

   

10   கந்தர் அநுபூதி-10

 

கார் மா மிசை காலன் வரில் கலப

தேர்மா மிசை வந்து எதிரப் படுவாய்

தார் மார்ப வலாரி தலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே

 

   

Meaning-10

   

Verses – 6 to 10

   

11   கந்தர் அநுபூதி-11

 

கூகா என என் கிளை கூடி அழப்

போகா வகை மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலு கவித்

தியாகா சுரலோக சிகாமணியே

 

   

12   கந்தர் அநுபூதி-12

 

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

 

   

13   கந்தர் அநுபூதி-13

 

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

உரு அன்று அரு அன்று உளது அன்று இலது அன்று

இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே

 

   

14   கந்தர் அநுபூதி-14

 

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று

உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்

மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே

 

   

15   கந்தர் அநுபூதி-15

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்

பொரு புங்கவரும் புவியும் பரவும்

குருபுங்கவ எண் குண பஞ்சரனே

 

   

Verses – 11 to 15

   

16   கந்தர் அநுபூதி-16

 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

ஓரா வினையேன் உழலத் தகுமோ

வீரா முது சூர் பட வேல் எறியும்

சூரா சுர லோக துரந்தரனே

 

   

17   கந்தர் அநுபூதி-17

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்ததனால்

பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே

 

   

18   கந்தர் அநுபூதி-18

 

உதியா மரியா உணரா மறவா

விதி மால் அறியா விமலன் புதல்வா

அதிகா அநகா அபயா அமரா

பதி காவல சூர பயங் கரனே

 

   

19   கந்தர் அநுபூதி-19

 

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடிபோ கியவா

அடி அந்தம் இலா அயில் வேல் அரசே

மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே

 

   

20   கந்தர் அநுபூதி-20

 

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்

உரிதா உபதேசம் உணர்த்தியவா

விரிதாரண விக்ரம வேள் இமையோர்

புரிதாரக நாக புரந்தரனே

 

   

Verses – 16 to 20

   

21   கந்தர் அநுபூதி-21

 

கருதா மறவா நெறிகாண எனக்கு

இருதாள் வனசம் தர என்று இசைவாய்

வரதா முருகா மயில் வாகனனே

விரதா சுர சூர விபாடணன

 

   

22   கந்தர் அநுபூதி-22

 

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுர பூபதி மேருவையே

 

   

23   கந்தர் அநுபூதி-23

 

அடியைக் குறியாது அறியா மையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடி விக்ரம வேல் மகிபா குறமின்

கொடியைப் புணரும் குண பூதரனே

 

   

24   கந்தர் அநுபூதி-24

 

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே

சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர் வேல புரந்தர பூபதிய

 

   

25   கந்தர் அநுபூதி-25

 

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து

ஐயோ அடியேன் அலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதும்

செய்யோய் மயில் ஏறிய சேவகனே

 

   

Verses – 21 to 25

   

Please leave your valuable suggestions and feedback here