தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள்
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
Please leave your valuable suggestions and feedback here

