Thalaikku Thalai Malai


 

தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே

சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே

அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே

அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள்

வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை

அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே

 

   

 

Please leave your valuable suggestions and feedback here